பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது சல்மான்கான் நடித்துள்ளார். கிசி கா பாய் கிசி கி ஜான் என்று அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, வெங்கடேஷ், விஜயேந்தர் சிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதியான நேற்று இரவு 9 மணிக்கு மும்பையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறிக்கை ஒரு மிரட்டல் போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தன்னை ஜோத்புரி சேர்ந்த கவுரசத் ராக்கி பாய் என்று கூறிக்கொண்டு ஏப்ரல் 30ம் தேதி அன்று சல்மான்கானை நான் கொன்று விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.