Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பொது மேடையில் முத்தம்: ஷில்பா ஷெட்டிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

05 ஏப், 2023 - 03:45 IST
எழுத்தின் அளவு:
Obscenity-case-against-Shilpa-Shetty-dismissed-by-Mumbai-court

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஏய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரியும் பங்கேற்றார். அப்போதும் நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு முத்தம் கொடுத்தார்.

பொது மேடையில் நடந்த இந்த செயல் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாகவும் இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் பல போராட்டங்கள் நடந்தது. ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2017ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் இருந்து ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஷில்பாவை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சிட்டாடல்' தொடரில் கதை தெரியாமல் நடித்தேன் : பிரியங்கா சோப்ரா'சிட்டாடல்' தொடரில் கதை தெரியாமல் ... ராம நவமிக்கு வெளியான ஆதிபுருஷ் போஸ்டர்; தயாரிப்பாளர் இயக்குனர் மீது புகார் ராம நவமிக்கு வெளியான ஆதிபுருஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)