7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் பாடலில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்து ஆபாசமாக ஆடியது பலமான எதிர்ப்பை கிளப்பியது. தணிக்கை குழுவும் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை வெளியிடுமாறு கூறியிருக்கிறது. படம் வெளியாக உள்ள நிலையில் வட இந்தியாவில் படத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்கு அங்கிருந்த பேணர்களை கிழித்து எரிந்தனர். விளம்பர ஆர்ச்சுகளை உடைத்து எரிந்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை திரையிடும் தியேட்டர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு குஜராத் தியேட்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அதன் தலைவர் ஜெகதீஷ் காத்ரி தெரிவித்துள்ளார்.