தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேற்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடினார். மும்பையிலுள்ள சல்மான்கானின் கேலக்ஸி வீட்டின் முன்பு ரசிகர்கள் பதாகைகளுடன் பெரிய அளவில் கூடியுள்ளனர். அப்போது சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் இணைந்து தனது வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப்பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு கூடிநின்ற ரசிகர்களுக்குகிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனிடையே சல்மான்கானின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாரூக்கான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி உள்பட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார் சல்மான்கான்.