இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக ஆடியிருந்தது வைரலாக பரவியது. அதோடு காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா படுகோன் நடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இதனால் பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
காவி நிறம், துறவு, தியாகம், அறிவு, தூய்மை மற்றும் சேவை ஆகியவற்றின் சின்னமாகும். அதனை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென வி.எச்.பி. தலைவர் டாக்டர் பிராச்சி சாத்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபூரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் சுகுமார் என்பவர் படத்தை தயாரித்த ஆதித்ய சோப்ரா, நடித்த ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலில் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ஆபாசத்தை பரப்பியதாவும் அவர் குற்றம்சாட்டி உள்ளர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட முசாபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விசாரணை வருகிற ஜனவரி 3ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.