இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சுதந்திர போராட்ட வீராங்கணை ஜான்சி ராணி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வாழக்கை படத்தில் நடித்தார். தற்போது அவர் எமெர்ஜென்ஸி என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இது முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்று படமாகும்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை பார்லிமென்ட்டில் படமாக்க கங்கனா திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கேட்டு அவர் பார்லிமென்ட் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எமெர்ஜென்சி காலத்தில் பல முக்கிய முடிவுகளை இந்திரா எடுத்தார். அந்த காட்சிகளை பார்லிமென்ட்டில் படமாக்கினால்தான் உயிரோட்டமாக இருக்கும் அதற்கு அனுமதி தரவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.
பொதுவாக பார்லிமென்ட்டில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பதில்லை. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கங்கனாவுக்கு அனுமதி கிடைக்காது என்கிறார்கள். என்றாலும், அனுமதி கிடைக்காத பட்சத்தில் சம்பந்தபட்ட இடங்களை மட்டும் படம்பிடித்து அதனை புளூமேட் முறையில் காட்சிகளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.