மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆலியா பட். அவர் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகத்தான் நடித்தார் என்றாலும் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இல்லாமல் இருந்தது. மேலும், ஒரு துணை நடிகைக்குரிய கதாபாத்திரத்தையே உருவாக்கி இருந்தார் ராஜமவுலி. இதனால், மிகவும் வருத்தத்தில் இருந்த ஆலியா பட், 'ஆர்ஆர்ஆர்' படம் சம்பந்தப்பட்ட சில படங்களை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். பின்னர் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் அடுத்து நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு ஆலியா பட் தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படத்திலிருந்து ஆலியா விலகிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல இனி தெலுங்குப் படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என ஆலியா சொல்லிவிட்டாராம். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. எனவே, இனி ஹிந்தியில் மட்டுமே நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஆலியா.