மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
போட்டி அதிகம் நிறைந்த பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக நீண்ட காலம் நிலைத்து நிற்பது கடினமான விஷயம். ஆனால் நடிகர் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் தனது திரையுலக பயணத்தில் 30ம் வருடத்தை தொட்டு இன்றைக்கும் முன்னணி ஹீரோவாகவே வலம் வருகிறார். இதைதொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ராஜமவுலியும் அஜய் தேவ்கனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
“அர்ப்பணிப்பு உணர்வமும் சினிமா மீதான ஆர்வமும் கொண்டு முப்பது வருடத்தை கடந்து சாதனை செய்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்த பயணத்தில் உங்களுடன் மக்கி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களில் இணைந்து பணியாற்றியதில் பெருமிதப்படுகிறேன்” என கூறியுள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, ராஜமவுலியின் ஈகா படம் இந்தியில் மக்கி என்கிற பெயரில் வெளியானபோது அதில் ஈக்காக குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன் தான்.