நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
போட்டி அதிகம் நிறைந்த பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக நீண்ட காலம் நிலைத்து நிற்பது கடினமான விஷயம். ஆனால் நடிகர் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் தனது திரையுலக பயணத்தில் 30ம் வருடத்தை தொட்டு இன்றைக்கும் முன்னணி ஹீரோவாகவே வலம் வருகிறார். இதைதொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ராஜமவுலியும் அஜய் தேவ்கனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
“அர்ப்பணிப்பு உணர்வமும் சினிமா மீதான ஆர்வமும் கொண்டு முப்பது வருடத்தை கடந்து சாதனை செய்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்த பயணத்தில் உங்களுடன் மக்கி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களில் இணைந்து பணியாற்றியதில் பெருமிதப்படுகிறேன்” என கூறியுள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, ராஜமவுலியின் ஈகா படம் இந்தியில் மக்கி என்கிற பெயரில் வெளியானபோது அதில் ஈக்காக குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன் தான்.