32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ‛இந்திய திரைப்பட ஆளுமை' விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2021ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுபவர்களின் பெயர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த 18-ம் தேதி அறிவித்தார். அதில், பிரபல பாலிவுட் நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் பிரபல பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், கோவாவில் 52வது சர்வதேச திரைப்பட விழா இன்று (நவ.,21) துவங்கியது. இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இதன் துவக்க விழாவில் நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகிய இருவருக்கும் ‛இந்திய திரைப்பட ஆளுமை விருது' வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இயக்குனர் கரண் ஜோகர், நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.