மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
அரசாங்கம் செயல்படுத்தும் சில நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அது நிச்சயம் திரையுலக நட்சத்திரங்களினால் மட்டுமே சாத்தியம் ஆகும். அந்தவகையில் மகாராஷ்டிரா அரசு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் ஊக்கப்படுத்துவதற்காக தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த மாநில அரசு முயற்சித்தாலும் கூட சில பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சல்மான்கானை இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாராம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.