32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
அரசாங்கம் செயல்படுத்தும் சில நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அது நிச்சயம் திரையுலக நட்சத்திரங்களினால் மட்டுமே சாத்தியம் ஆகும். அந்தவகையில் மகாராஷ்டிரா அரசு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் ஊக்கப்படுத்துவதற்காக தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த மாநில அரசு முயற்சித்தாலும் கூட சில பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சல்மான்கானை இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாராம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.