வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே கவனிக்கப்படாதவர் அந்த நடிகர். அந்தப் படம் வந்து போனதே பலருக்கும் தெரியாது. அதற்குப் பின் ஓரிரு வருட இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் நேரடியாக வெளியான ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கடுத்து அப்பாவை செல்லமாக அழைக்கும் படத்தில் நடித்தார். தியேட்டரில் வெளியான அந்தப் படம் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்தது.
அதன்பின் தான் அவரது அணுகுமுறை அப்படியே மாறிவிட்டதாம். அதற்கடுத்து அவரை அணுகிய தயாரிப்பாளர்களை பல கோடி சம்பளம் கேட்டு ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த வருடம் அவர் நடித்து வந்த ஒரு படத்திற்கு வெற்று பில்டப் கொடுத்து ஓட வைக்கப் பார்த்தார்கள். ஆனால், அது ஓடவேயில்லை. அது போலவே கடந்த வாரம் வெளியான ஒரு 'பிச்சைக்காரன்' படத்திற்கும் பில்டப் கொடுத்து ஓட வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்குப் போனவர்கள்தான் தெறித்து ஓடி வந்தார்களாம். ஒரு சில நாட்கள் என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார்கள். இப்போது எத்தனை கோடி நஷ்டம் வரும் என கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஒரே வெற்றியில் தலை, கால் தெரியாமல் ஆடிய அந்த நடிகருக்கு பிச்சைக்காரன் நல்லதொரு பாடம் எடுத்திருக்கிறார் என கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஆக அந்தப் படத் தோல்வியைத்தான் பேசுகிறார்களாம். அவரை வைத்து அடுத்து படங்களை எடுத்துள்ள தயாரிப்பாளர்கள் வியாபாரத்திற்கு என்ன செய்வது என தவிப்பதாகத் தகவல்.