இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடிந்து முடிந்துள்ளது. முந்தைய சீசன்களை கம்பேர் செய்யும் போது பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்திற்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் ஒருபுறம் வெளியாகி வர, முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்களை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் முதல் ஆளாக ஆர்மி வைத்திருந்த நடிகை சம்மதம் தெரிவித்துட்டாராம். அவருடன், பிரபல நடிகருடனும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவரோ, 'எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, வாழ்க்கை நல்ல போயிட்டு இருக்கு. இனி நான் பிக்பாஸூக்கு சரி பட்டு வரமாட்டேன். ஆள விடுங்க' என எஸ்கேப் ஆகிவிட்டராம். ஓடிடியில் வெளியாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், ஜூலியானா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.