Advertisement

சிறப்புச்செய்திகள்

கர்ப்ப காலத்தில் யோகா செய்த தீபிகா படுகோனே | கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி | ஜமா படத்திற்காக நிஜ தெருக்கூத்து கலைஞர்களை பாடவைத்து இசையமைத்த இளையராஜா | ஸ்பெயின் டென்னிஸ் வீரரையும் விட்டு வைக்காத ஆவேசம் பட பாடல் | திரிஷா, வினய்யை தொடர்ந்து ஐடென்டி படப்பிடிப்பை முடித்த டொவினோ தாமஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

நம்ம வீட்டு பொண்ணு சரண்யா நெகிழ்ச்சி

09 ஜூன், 2024 - 01:13 IST
எழுத்தின் அளவு:
Saranya-exclusive-interview


விரும்பும் துறையில் சாதிப்பேன் என பிடிவாதமாக இருந்து, அத்துறையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் சிலரே. திறமை, ஆர்வம் இருந்தால் சினிமாவில் சாதிக்கலாம். அதற்கு நிறம் முக்கியமல்ல என சினிமா, குறும்படங்களில் நடித்து முத்திரை பதித்து வருபவர் திருச்சியை சேர்ந்த சரண்யா ரவிச்சந்திரன். இவர் இதுவரை 130 குறும்படங்கள், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக பேசியதாவது: திருச்சியில் டிகிரி முடித்து விட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தேன். அந்த பணியில் எனது ரோல் மாடலாக திவ்வியதர்ஷினி (டிடி)யை பின்பற்றினேன். அவரை போல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நினைத்து வேலை செய்தேன். அப்போது முதன்முதலாக குறும்படத்தில் நடித்தேன். நடிப்பு நன்றாக உள்ளது என நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தொடர் முயற்சி செய்தேன். அதற்காக நடிப்பு பயிற்சியும் பெற்றேன்.

சினிமா ஆசையில் நடிகர்கள் தேர்விற்கு சென்றேன். 'இறைவி' நான் நடித்த முதல்படம், ஆனால் 'காதலும் கடந்து போகும்' படம் முதலில் வெளிவந்தது. ரெக்க, சீறு, ஜெயில், பைரி உள்ளிட்ட படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.

நடிக்க துவங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நடித்தால் வாழ்க்கை மாறி விடும் என நினைத்தேன். அது என்றாாது ஒருநாள் நடக்கும் என நம்புகிறேன். சினிமா ஒரு பேஷன். இன்னும் நிறைய துாரம் செல்ல வேண்டும். வாழ்க்கையில் சினிமா ஒரு பகுதி தான் என புரிகிறது. என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். பல அனுபவத்தை கற்றுக்கொடுத்துள்ளது சினிமா. சிலர் திரைப்படங்களில் என்னை பார்த்து 'நம்மவீட்டு பொண்ணு மாதிரி இருக்கு' என கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

சினிமா துறைக்கு செல்கிறேன் என்ற போது அம்மா பயந்தார். அப்பா உற்சாகப்படுத்தினார். சில படங்களில் பாராட்டு பெற்றதை தொடர்ந்து தற்போது அம்மாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தியன் 2, டீசல், சண்டகாரன், லைன்மேன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. ரஜினிகாந்த் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும். இயக்குனர்கள் மணிரத்தினம், வெற்றிமாறன் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது.

ஒரு போதும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தொடர்ந்து புத்தகங்கள் படிக்கிறேன். புத்தகங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'இவ பந்தைய புறா....' பாடலால் புது அங்கீகாரம்: ஸ்ரீ கவுரி பிரியா'இவ பந்தைய புறா....' பாடலால் புது ... ‛‛தடைகளை தாண்டுவேன்'': 'தில்' திண்டுக்கல் நான்ஸி ‛‛தடைகளை தாண்டுவேன்'': 'தில்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)