ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். அதேபோல் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன், விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களிலும் இதே தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இன்றைய தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் திரை உலகத்தை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் வெளியாகி வருகின்றன. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்தியிருப்பதாக இதுவரை யாரும் எங்களிடத்தில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அனுமதி இல்லாமல் பத்திரிக்கை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தேமுதிக அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.