லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் காரணம் இல்லை என நடிகை ஷீலா தெரிவித்துள்ளார். விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். தற்போது ஷீலா தொடரிலிருந்து விலக்கப்பட்டதுடன், தொடரில் அவர் இறந்ததாகவும் காட்டப்பட்டது. இந்நிலையில் இதற்கு காரணம் ஷீலாவின் மகனும், நடிகருமான விக்ராந்தே காரணம் என செய்திகள் பரவி வருகிறது.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷீலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் தான் காரணம் என்பது வெறும் வதந்தி தான். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் விஜய் டிவி-யின் புதிய சீரியலில், ஹீரோயினின் அம்மாவாக நடிக்கிறேன். என்னை வேண்டுமென்றே நீக்கியிருந்தால், எதற்கு மீண்டும் அழைக்க வேண்டும்? என அதில் கூறியுள்ளார்.