ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் காரணம் இல்லை என நடிகை ஷீலா தெரிவித்துள்ளார். விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். தற்போது ஷீலா தொடரிலிருந்து விலக்கப்பட்டதுடன், தொடரில் அவர் இறந்ததாகவும் காட்டப்பட்டது. இந்நிலையில் இதற்கு காரணம் ஷீலாவின் மகனும், நடிகருமான விக்ராந்தே காரணம் என செய்திகள் பரவி வருகிறது.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷீலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் தான் காரணம் என்பது வெறும் வதந்தி தான். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் விஜய் டிவி-யின் புதிய சீரியலில், ஹீரோயினின் அம்மாவாக நடிக்கிறேன். என்னை வேண்டுமென்றே நீக்கியிருந்தால், எதற்கு மீண்டும் அழைக்க வேண்டும்? என அதில் கூறியுள்ளார்.