ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல பின்னணி பாடகி பி சுசீலா மற்றும் பாடலாசிரியர் மு.மேத்தா ஆகியோருக்கு “கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில், கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். கடந்த 2023ம் ஆண்டுக்கான விருது, பின்னணிப் பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும்.
பாடகி சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.
கவிஞர் மு.மேத்தா, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை உருவாக்கியவர். 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதி, தனி முத்திரை பதித்தவர். மாநிலக்கல்லுாரி பேராசிரியராக பணியாற்றியவர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருது, வரும் 30ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.