பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! |
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரபல சீரியல் ஒன்றை மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஞ்சித், ப்ரியா ராமன், ஸ்ரீ நிதி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'செந்தூரப்பூவே' தொடர் விஜய் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பபாங்கான கதைக்களம் கொண்ட இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் பாய்ண்ட்ஸ்களை அள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சரியான டைம் ஸ்லாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சில தொடர்களின் நேரங்களும் மாற்றப்படவுள்ளது.
அந்த வகையில் 1 மணி நேர ஷோவிற்காக இரண்டு சீரியல்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். இதற்கிடையில் செந்தூரப்பூவே தொடரை 3 மாதங்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்க தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சிகாகவா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதேபோல் விஜய் டிவின் மற்றொரு முக்கிய தொடரான தேன்மொழி பி.ஏ தொடரும் முடிவை நோக்கி நகர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.