பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
உலகளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான ‛சர்வைவர் நிகழ்ச்சி முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. செப்., 12 முதல் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அர்ஜூன் முதன் முறையாக இந்நிகழ்ச்சி மூலம் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபர் தீவில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 10 போட்டியாளர்களில் 8 போட்டியாளர்கள் விபரம் கடந்த ஞாயிறு அன்று போட்டியின் துவக்க நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், பிகில் படத்தில் நடித்தவருமான இந்திரஜா, ‛வடசென்னை, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரண் சக்தி, நடிகை லக்ஷமி ப்ரியா, நடிகர் ராம் சி, நடிகர் லக்கி நாராயணன், விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன், சிங்கப்பூரை சேர்ந்த பாடகி லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான் என மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் களமிறங்க உள்ளனர்.