மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் ஆதரவோடு 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது 8வது சீசனும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீ ராம், எஸ்.பி.சரண் மற்றும் பென்னி தயால் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த முடிந்த எபிசோடில் ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.
ஸ்ரீதர் சேனாவின் வெளியேற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நடுவர்களை கடுமையாக குற்றம் சாட்டி பதிவிட்டு வருகின்றனர். இதனால் மனமுடைந்த நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.