இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரேனாவின் 2வது அலை தீவிரமாக தமிழ்நாட்டில் பரவி வரும் நிலையில் கடந்த பல மாதங்களாகவே ஊரடங்கு தளர்வுகளுடனும், தளர்வுகள் இல்லாமலும் நடைமுறையில் இருக்கிறது. சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. என்றாலும் சின்னத்திரை சேனல்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் சீரியல்களுக்கு படப்பிடிப்புகள் நடத்தியே ஆக வேண்டும். ஒரு சீரியலில் அதிக பட்சம் 15 முதல் 20 எபிசோட்கள் வரை மட்டுமே கையில் வைத்திருப்பார்கள். படப்பிடிப்பு இல்லாவிட்டால் 3 வாரங்கள் வரை தாக்குப்பிடித்து கையில் இருக்கிற எபிசோட்களை ஒளிபரப்பலாம். அதற்குபிறகு கட்டாயம் படப்பிடிப்பை நடத்தியே ஆக வேண்டும்.
இந்த சூழ்நிலை இருப்பதால் பல சீரியல்கள் தற்போது வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் கடுமையான விதிமுறைககளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பல தமிழ் சீரியல்களின் படப்பிடிப்பு அங்கு தொடங்கி உள்ளது. நடிகர், நடிகைகள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
தடுப்பூசி, கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்புகளுக்கு இடையில் இந்த படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு விஜய் தொலைக்காட்சிக்கு தொழில்நுட்ப குழு இருப்பதால் நடிகர், நடிகைகள் மட்டும் அங்கு சென்று நடித்து வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்யலட்சுமி தொடரில் நடிக்கும் கலைஞர்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.