32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே நடித்து வருகிறார். இவர் அண்மையில் விழா ஒன்றில் பேசிய போது மூத்த நடிகையான வடிவுக்கரசியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பேசிய போது, 'ஒரு சில நடிகைகள் இன்று சீரியலில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துவிட்டாலே எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என திமிராக நடந்து கொள்கிறார்கள். மற்றவர்களை இளக்காரமாக நடத்துகிறார்கள். இவர்களை பார்த்தால் எரிச்சல் வரும். ஆனால், வடிவுக்கரசி அம்மா அப்படியில்லை. சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோருடனும் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் யாரிடமும் திமிராக நடந்து கொள்ளமாட்டார். தன்னுடன் நடிப்பவர்களை அரவணைத்து கொண்டு செல்வார்' என புகழ்ந்து பேசியிருக்கிறார்.