சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ் சினிமாவில் மூத்த நடிகை வடிவுக்கரசி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 400 படங்கள் நடித்துள்ளார். சில படங்களில் நாயகியாகவும், பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். இன்றைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்து வரும் இவர் சினிமா தவிர்த்து நிறைய சீரியல்களிலும் நடிக்கிறார்.
இன்றைக்கு சினிமாவில் நடிக்க ஆசைப்படுவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாக பிரபலங்கள் நடித்ததை, நடனம் ஆடியதை ரீல்ஸாக போட்டு பிரபலமாகி சினிமாவிலும் சிலர் வாய்ப்பை பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு நடிகை மிருணாளினி ரவியை கூறலாம். இந்நிலையில் ரீல்ஸ் பிரபலங்கள் சினிமாவில் திணறுவதாக வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛இன்றைக்கு நிறைய பேர் ரீலீஸ் பண்றாங்க. அவர்களுக்கு இருக்கும் நிறைய பாலோயர்களை பார்த்து சில இயக்குனர்கள் சினிமாவில் வாய்ப்பு தராங்க. பெரிய பெரிய நடிகர்கள் நடிச்சத, பாட்டு பாடியத இவுங்க எடுத்து ரீல்ஸ் போடுறாங்க. ஆனால் அவர்களுக்கென்று ரியல் டயலாக் கொடுத்து பேச சொன்னால் திணறுறாங்க. நான் நடிக்கும் படங்களில் இதை பார்த்து சில இயக்குனர்களிடம் கேட்டுள்ளேன். அதற்கு இயக்குனர்கள் அவர்களுக்கு ஆயிரம் பாலோயர்கள் இருக்காங்கன்னு சொல்றாங்க. இவர்கள் திணறுவதால் எல்லோருடைய நேரமும், பணமுமே வீணாகிறது. ரீல்ஸ் வந்து பொழுபோக்குக்காக செய்வது. ஆயிரம் பாலோயர்கள் அதுவரை தான் இருப்பாங்க'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




