மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக நேற்று காலமானார். பல சின்னத்திரை நடிகர்களும் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், சதீஷும் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 'அன்பு சகோதரன் நேத்ரன் ஆறு மாதமாக கஷ்டப்பட்டு இறந்திருக்கிறார். நேத்ரனை எனக்கு 22 வருடங்களாக தெரியும். இத்தனை வருடத்தில் நேத்ரன் ஒருமுறை கூட கோபப்பட்டு பார்த்ததில்லை. மிகவும் மென்மையானவர். பக்குவமானவர். கனிவாக பேசக்கூடிய ஆத்மா. நல்லவர்களை ஆண்டவன் ஏன் இவ்வளவு சோதிக்கிறான்னு தெரியல. நேத்ரனுடைய ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் வேண்டிக்குவோம்' என உருக்கமாக கூறியுள்ளார்.