பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
17வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் ஏப்ரல் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு பினாங்கு லைட் ஓட்டலில் நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ், பினாங்கு மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜு, ஆட்சி குழு உறுப்பினர் குமரன், பினாங்கு மாநில மேயர் டத்தோ ராஜேந்திரன், டத்தோ பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சதீஷ் பேசுகையில், ‛‛சினிமாவை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என எண்ணம் தோன்றியது செல்வகுமாரையே சாரும். கடத்த 16 ஆண்டுகளாக பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், என சினிமா துறைக்கு தொடர்ந்து விருது வழங்கிய ஊக்குவித்து வருகிறார்'' என்றார்.
தொடர்ந்து இந்த விருது நிகழ்வில் போட்டியிடும் பல்வேறு படங்கள், திரைப்பிரபலங்களுக்கு ஓட்டளிக்கும் நிகழ்வும் ஆன்லைனில் துவங்கியது. சதீஷ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஓட்டளித்தனர்.
ஏப்ரல் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்பைஸ் அரேனா அரங்கில் எடிசன் திரை விருதுகள் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் முதன் முறையாக பினாங்கில் நடக்கவிருக்கும் எடிசன் பிலிம் பெஸ்டிவலில் அமரன், மகாராஜா, விடுதலை 2, மெய்யழகன், லப்பர் பந்து ஆகிய 5 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் எடிசன் திரை விருது ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான நடிகரின் படம் போட்ட டி-ஷர்டையும் (T-Shirt) விற்பனை செய்ய உள்ளதாக செல்வகுமார் தெரிவித்தார்.