நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரபல சின்னத்திரை நடிகர் பழனியப்பன் லொள்ளு சபா காலம் முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் பயணித்து வருகிறார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரில் இவர் நடித்து வரும் செல்வம் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பழனியப்பன் ஒரு விருது நிகழ்வில் கலந்து கொண்ட போது தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஓப்பனாக பதிவிட்டுள்ளார்.
அதாவது, பழனியப்பனுக்கு அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சி நிறுவனம் விருது ஒன்றை வழங்கியுள்ளது. ஆனால், விருது வழங்கியவர்களுக்கோ பழனியப்பன் யார்? அவர் எந்த தொடரில் நடிக்கிறார்? எதற்காக அவருக்கு விருது கொடுக்கப்படுகிறது என எதையும் தெரியாமல் பெயருக்கு அழைத்து விருது கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள பழனியப்பன், 'கலைஞர்களை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள்' என காட்டமாக தனது வேதனையை பதிவு செய்துள்ளார். யார் என்ன அவார்டு கொடுத்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு பெருமை பீத்தும் சில நடிகர்களுக்கு மத்தியில் ஒரு கலைஞனுக்கு விருது என்பது எப்பேற்பட்ட அங்கீகாரம் என்பதை பழனியப்பன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.