டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரை நடிகையான ஜெனிப்ரியா வாணி ராணி சீரியலின் மூலம் அறிமுகமாகி, சில தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார்.
சொந்தமாக ப்யூட்டி பார்லர் வைத்திருக்கும் ஜெனி ப்ரியாவுக்கு சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இப்போதே 100 சவரன் நகை வேண்டுமென கேட்க, ஜெனிப்ரியா முதலில் 50 சவரன் நகையை மட்டும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஜெனிப்ரியாவை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற மாப்பிள்ளை வீட்டாரின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு ஜெனிப்ரியா வந்துள்ளார்.
அப்போது அவர் கொடுத்த பொருட்களை எல்லாம் திருப்பி கொடுத்த மாப்பிள்ளை வீட்டார் 50 சவரன் நகை பற்றி கேட்டால் அப்படி எதுவுமே தங்களிடம் கொடுக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியான ஜெனிப்ரியா தற்போது துநேசன் மற்றும் குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.




