ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை நடிகையான ஜெனிப்ரியா வாணி ராணி சீரியலின் மூலம் அறிமுகமாகி, சில தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார்.
சொந்தமாக ப்யூட்டி பார்லர் வைத்திருக்கும் ஜெனி ப்ரியாவுக்கு சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இப்போதே 100 சவரன் நகை வேண்டுமென கேட்க, ஜெனிப்ரியா முதலில் 50 சவரன் நகையை மட்டும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஜெனிப்ரியாவை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற மாப்பிள்ளை வீட்டாரின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு ஜெனிப்ரியா வந்துள்ளார்.
அப்போது அவர் கொடுத்த பொருட்களை எல்லாம் திருப்பி கொடுத்த மாப்பிள்ளை வீட்டார் 50 சவரன் நகை பற்றி கேட்டால் அப்படி எதுவுமே தங்களிடம் கொடுக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியான ஜெனிப்ரியா தற்போது துநேசன் மற்றும் குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.