ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

'வாணி ராணி, அழகு' ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சாரா என்கிற ஜெனிபர் பிரியா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மன்னர் வகையறா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பெரிதளவில் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தாத சாரா, மேக்கப் ஆர்டிஸ்டாக பல சின்னத்திரை பிரபலங்களை அலங்கரித்துள்ளார். இவரது இரண்டாவது மேக்கப் ஸ்டூடியோவை நடிகர் விஜய் சேதுபதி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவரை சாரா திருமணம் செய்ய உள்ளார். துநேசன் சிங்கப்பூரில் பைலட்டாக வேலை பார்ப்பதோடு அங்கேயே குடியுரிமையும் வைத்துள்ளார். எனவே, திருமணத்திற்கு பிறகு சாரா தனது மேக்கப் அகாடமியை சிங்கப்பூரிலேயே தொடரவுள்ளார். மேலும், சின்னத்திரையில் மேக்கப், நடிப்பு என எந்த வாய்ப்பு வந்தாலும் தமிழகத்திற்கு வந்து செல்லவும் முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறாராம்.




