நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் முன்னிலை வகித்தார்.
சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் நல வாரியத்தின் மூலம் கிடைக்கும் நலவாரிய அட்டையையும் செய்தித்துறை அமைச்சர் வழங்கி வாழ்த்தி பேசினார் .
சங்கத்தின் புதிய தலைவர் மங்கை அரிராஜன் பேசும்போது “சின்னத்திரை இயக்குனர்களுக்கான புதிய ஊதிய உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இனி சின்னத்திரை தயாரிப்பாளர்கள் இந்த புதிய ஊதிய உயர்வை கொடுக்க வேண்டும். சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இனி சின்னத்திரை சீரியல்களில் பணிபுரியக் கூடாது. சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குனர்கள் மற்றும் உதவி துணை, இணை இயக்குனர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்” என்றார்.
விழாவில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் எஸ் தானு, நடிகர் எஸ்வி சேகர், திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், குட்டி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.