என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சின்னத்திரை பிரபலங்களான அமீத் பார்கவும், ஸ்ரீரஞ்சனியும் சிறந்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வேதா ஸ்ரீ என்கிற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில ஊடகங்களில் அமீத் பார்கவின் மகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அமீத் பார்கவ், 'என் மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டோம். அவளுக்கு இருப்பது எக்கோலாலியா. நாம் சொல்கிற சில விஷயங்களை சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது அவ்வளவு தான். மற்றபடி என் மகள் நன்றாக இருக்கிறாள்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேதா ஸ்ரீக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என ரசிகர்கள் கமெண்டுகளில் தங்கள் ஆதரவை அமீத் பார்கவ் - ஸ்ரீரஞ்சனிக்கு கூறி வருகின்றனர்.