25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரை பிரபலங்களான அமீத் பார்கவும், ஸ்ரீரஞ்சனியும் சிறந்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வேதா ஸ்ரீ என்கிற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில ஊடகங்களில் அமீத் பார்கவின் மகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அமீத் பார்கவ், 'என் மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டோம். அவளுக்கு இருப்பது எக்கோலாலியா. நாம் சொல்கிற சில விஷயங்களை சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது அவ்வளவு தான். மற்றபடி என் மகள் நன்றாக இருக்கிறாள்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேதா ஸ்ரீக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என ரசிகர்கள் கமெண்டுகளில் தங்கள் ஆதரவை அமீத் பார்கவ் - ஸ்ரீரஞ்சனிக்கு கூறி வருகின்றனர்.