மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் குறித்தும் சமூகத்தில் திருமண உறவில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், 'என்னுடைய கணவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய எனர்ஜிக்கு அவர் தான் காரணம். திருமணம் செய்யும்போது ஒருவர் அதிக புரிதலுடனும், மற்றொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார்கள். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவருடன் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மாதத்திலேயே பிரிந்து விடுகிறார்கள். இதை தவறில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுதான் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுவதையே கிரிஞ்ச் என்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்' என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.