ஆன்மிக உதவியால் வலியை கடந்து வலிமை ஆகிவிட்டேன் : சமந்தா | நானிக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர் | டிரெயின் படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன் | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் வேல் | கவர்ச்சி ஆட்டம் போட்ட காவ்யா தாபர் | விடுதலை 2வில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் | 'சதுர்' படத்தில் 5 ஆயிரம் வருட கதை | பிளாஷ்பேக் : காணாமல் போன கவர்ச்சி நடிகை | 'பார்டர்' ரிலீஸ் : ஏக்கத்துடன் பதிவு, பின்னர் நீக்கிய இயக்குனர் அறிவழகன் | ஆகஸ்ட் முதல் நடிக்க வருகிறேன் - சமந்தா |
பிரபல சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் குறித்தும் சமூகத்தில் திருமண உறவில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், 'என்னுடைய கணவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய எனர்ஜிக்கு அவர் தான் காரணம். திருமணம் செய்யும்போது ஒருவர் அதிக புரிதலுடனும், மற்றொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார்கள். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவருடன் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மாதத்திலேயே பிரிந்து விடுகிறார்கள். இதை தவறில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுதான் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுவதையே கிரிஞ்ச் என்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்' என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.