ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹரிகா. இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். இவருக்கும் வெங்கட சைதன்யா ஜொன்னலகட்டா என்பவருக்கும் கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் உதய்ப்பூரில் உள்ள ஓபராய் உதய்விலாஸில் திருமணம் நடந்தது.
கடந்த சில மாதங்களாகவே நிஹரிகா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லப்பட்டது. கடந்த மாதம் நிஹரிகாவின் கணவர் வெங்கட சைதன்யா அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் நிஹரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து, அவரையும் அன்பாலோ செய்தார். ஆனாலும், நிஹரிகா அவரை பாலோ செய்து கொண்டுதான் இருந்தார்.
ஆனால், தற்போது நிஹரிகாவும் அவருடைய இன்ஸ்டாவிலிருந்து வெங்கட சைதன்யா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டு அவரை அன்பாலோ செய்துவிட்டார். விரைவில் இருவரும் அவர்களது விவாகரத்து பற்றிய அறிவிப்பை வெளியிடலாம். நிஹரிகா சமீபத்தில் சொந்தமாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழிலும் படங்களைத் தயாரிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்.