தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹரிகா. இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். இவருக்கும் வெங்கட சைதன்யா ஜொன்னலகட்டா என்பவருக்கும் கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் உதய்ப்பூரில் உள்ள ஓபராய் உதய்விலாஸில் திருமணம் நடந்தது.
கடந்த சில மாதங்களாகவே நிஹரிகா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லப்பட்டது. கடந்த மாதம் நிஹரிகாவின் கணவர் வெங்கட சைதன்யா அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் நிஹரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து, அவரையும் அன்பாலோ செய்தார். ஆனாலும், நிஹரிகா அவரை பாலோ செய்து கொண்டுதான் இருந்தார்.
ஆனால், தற்போது நிஹரிகாவும் அவருடைய இன்ஸ்டாவிலிருந்து வெங்கட சைதன்யா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டு அவரை அன்பாலோ செய்துவிட்டார். விரைவில் இருவரும் அவர்களது விவாகரத்து பற்றிய அறிவிப்பை வெளியிடலாம். நிஹரிகா சமீபத்தில் சொந்தமாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழிலும் படங்களைத் தயாரிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்.