‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கோலங்கள் என்கிற மாபெரும் ஹிட் தொடரை கொடுத்த திருசெல்வம் சில ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். கோலங்களை விடவும் எதிர்நீச்சல் தொடரின் கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்தது. எனவே, அந்த சீரியலுக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டி ஒளிபரப்பாக அனுமதி கிடைத்தது. ஆனால், இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அதை தொடர்ந்து வேல ராமமூர்த்தி அந்த தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்தாலும் சீரியல் பழைய வேகத்தை பெற முடியாமல் டிஆர்பியில் திணறி தற்போது முடிவுக்கே வந்துவிட்டது.
இந்நிலையில், இந்த தொடரில் பட்டம்மாள் என்கிற முக்கிய கேரக்டரில் நடித்த பாம்பே ஞானம் அண்மையில் அளித்த பேட்டியில், 'எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் தொடர்ந்து சொதப்பியதால் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தை வேறொரு டைம் ஸ்லாட்டிற்கு மாற்ற சொல்லி மெயில் அனுப்பினார்கள். அதனால் தான் இயக்குநர் சீரியலை ஒரேடியாக முடித்துவிட்டார்' என்று கூறியுள்ளார்.