‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சின்னத்திரை நடிகை தீபா அண்மையில் இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ப்ரியமான தோழி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து வரும் தீபா, தனது கடந்தகால வாழ்வின் கசப்பான அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'நான் 14 வயதிருக்கும் போது சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். தப்பான நபரை 16 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அது மிகவும் தவறாக அமைந்தது. அப்போதெல்லாம் ரேஷனில் அரிசி வாங்கி சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டேன். திருமணத்திற்கு பிறகு தான் முதல் கணவரின் சுயரூபம் தெரிந்தது. குழந்தையை பெற்றெடுத்த பின் பிழைக்க வழியில்லாமல் குழந்தையை 'அத்திப்பூக்கள்' சீரியலில் நடிக்க வைத்து அந்த காசை வைத்து சாப்பிட்டோம். குழந்தைக்கு 4 வயதாகும் போது தான் நான் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். அதிலும் குழந்தையை ஹாஸ்டலில் விட்டு செல்லும் போதெல்லாம் நான் யாருடனோ ஊர் சுற்றுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்' என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.




