சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சின்னத்திரை நடிகை தீபா அண்மையில் இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ப்ரியமான தோழி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து வரும் தீபா, தனது கடந்தகால வாழ்வின் கசப்பான அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'நான் 14 வயதிருக்கும் போது சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். தப்பான நபரை 16 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அது மிகவும் தவறாக அமைந்தது. அப்போதெல்லாம் ரேஷனில் அரிசி வாங்கி சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டேன். திருமணத்திற்கு பிறகு தான் முதல் கணவரின் சுயரூபம் தெரிந்தது. குழந்தையை பெற்றெடுத்த பின் பிழைக்க வழியில்லாமல் குழந்தையை 'அத்திப்பூக்கள்' சீரியலில் நடிக்க வைத்து அந்த காசை வைத்து சாப்பிட்டோம். குழந்தைக்கு 4 வயதாகும் போது தான் நான் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். அதிலும் குழந்தையை ஹாஸ்டலில் விட்டு செல்லும் போதெல்லாம் நான் யாருடனோ ஊர் சுற்றுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்' என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.