மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடன இயக்குநர் நந்தா மாஸ்டர் சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகியுள்ளார். அந்த வகையில் அவர் நடித்து வந்த கண்ணே கலைமானே சீரியல் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதற்கிடையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் அடிபட்டு ரெஸ்ட் எடுக்க சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், அவர் தற்போது சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் அடிபட்ட போதிலும் தன்னை தொடர்ந்து நடிக்க வற்புறுத்தியதாகவும், ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலையிலும் தன்னை நடிக்க அழைத்ததால் சேனல் தரப்புடன் மனகசப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக தான் கண்ணே கலைமானே சீரியலிலிருந்து விலகிவிட்டதாக நந்தா மாஸ்டர் கூறியுள்ளார். நந்தா மாஸ்டர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நளதமயந்தி என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.