மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் வில்லன், ஹீரோ, காமெடியன் என கலக்கி வருகிறார் நடிகர் சதீஷ். இவருக்கென தற்போது தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சதீஷ் அடிக்கடி ஏதாவது அப்டேட் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சீரியல் ஒன்றின் புரோமோவை வெளியிட்டுள்ள அவர், 'நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் நடிக்க ஒப்புக்கொண்ட ரோல். ஆனால், எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்ற பாடத்தை வாழ்க்கை மீண்டும் எனக்கு கற்பித்துள்ளது. நாம் என்னதான் சிறப்பாக செயல் செய்தாலும் அதை அழிப்பதற்கு சில பேர் காத்துக்கொண்டிருப்பார்கள். நண்பர்களே இது தான் உண்மை. வாழ்க்கை தத்துவம்' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷ் சிறப்பாக நடித்து வருவதை கூறி அவருக்கு இதை விட பல நல்ல ப்ராஜெக்ட்டுகள் கிடைக்கும் என வாழ்த்தி வருகின்றனர்.