திரை உலகில் அடுத்த சோகம்... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு | நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் |
சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு கரை ஒதுங்கிய டெல்னா டேவிஸ் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அன்பே வா தொடரில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் அவரது நடித்து வந்த கதாபாத்திரம் இறந்துவிட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பாகவே ஸ்ரீகோபிகா என்ற இரண்டாவது நாயகியை சீரியலுக்குள் அறிமுகப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தையும் திரைக்கதையில் அதிகப்படுத்தியுள்ளனர். மற்றொருபுறம் டெல்னா டேவிஸ் வெளிநாட்டில் ஜாலியாக டூர் சுற்றிக்கொண்டே வரிசையாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவை வேண்டாம் என்பது போல் பேசியிருந்த டெல்னா டேவிஸ் அண்மையில் நடிகர் மாதவனுடன் புகைப்படம் வெளியிட்டு டிஸ்கசன் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை புதிய படத்தில் கமிட்டாவதால் சீரியலிலிருந்து விலகிவிட்டாரா? என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகிறது.