ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
பிரபல நடிகை மற்றும் வீஜேவான ஸ்வர்ணமால்யா ஒரு காலத்தில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவிலும் சின்னத்திரை சீரியல்களிலும் பல முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். தற்போது திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் ஸ்வர்ணமால்யா பரதநாட்டிய பள்ளியை ஆரம்பித்து பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சோசியல் மீடியா மிகவும் வக்கிரமாக இருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சோசியல் மீடியாவில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. மற்றவருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பேசினால் 25 பேராவது கழுவி ஊற்றுவார்கள். முகத்தை மூடிக்கொண்டு கோழைத்தனமாக சண்டை போடுகிறார்கள். இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. முன்கூட்டியே தப்பாக எடை போட்டு கமெண்ட் செய்கிறார்கள். இப்போது உள்ள காலத்தில் யாருக்கும் தனி மனித ஒழுக்கம் இல்லை. இந்த சமுதாயம் வக்கிரமாக மாறிக்கொண்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.