மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல நடிகரான ராகவ் ரங்கநாதன் செவ்வந்தி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அந்த தொடரில் அவர் இறந்தது போல் காண்பிக்கப்பட்டு ராகவ் கதாபாத்திரத்திற்கு எண்ட் கார்டு போட்டுவிட்டனர். அதன்பின் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகமல் இருந்த ராகவ் தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணெதிரே தோன்றினாள்' சீரியலில் மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ, ரேகா கிருஷ்ணப்பா, வடிவுக்கரசி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
தற்போது அந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில், நடிகர் ராகவ் ரங்கநாதனும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதுகுறித்து பேசுகையில், 'கண்ணெதிரே தோன்றினாள் என்ற சூப்பர் ஹிட் தொடரில் இணைவதில் ஆவலாக உள்ளேன். நீண்டநாட்களுக்கு பிறகு மாளவிகா அவினாஷூடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகமாக இருக்கிறேன் ' என்று கூறியுள்ளார்.