எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவுடன் 9வது சீசனையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிபோட்டியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டார். அருணா, பூஜா, அபிஜித், பிரசன்னா மற்றும் பிரியா ஜெர்சன் என 5 பேர் இறுதிபோட்டியில் கலந்து கொண்டனர். இதில், மக்கள் மற்றும் நடுவர்களின் வாக்குகள் அடிப்படையில் அருணா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் சீசன் 9க்கான டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்லும் அவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ. 10 லட்சம் பணம் வழங்கப்பட்டது.
அதேபோல் இரண்டாம் இடத்தை பிடித்த பிரியா ஜெர்சனுக்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடத்தை பிடித்த பிரசன்னாவுக்கு ரூ. 5 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற நபர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டாப் 3ல் கூட இல்லையா? சோகத்தில் பூஜா ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் 9 இறுதிப்போட்டியில் அருணா, பிரியா ஜெர்சன் மற்றும் பிரசன்னா ஆகியோர் டாப் 3 இடத்தை பிடித்து பரிசு பெற்றுள்ளனர். ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதலே நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூஜா தான். இறுதிபோட்டியில பூஜா தான் அதிக வாக்குகளுடன் டைட்டில் பட்டம் வெல்வார் என்று அவரது ரசிகர்களும் நம்பி வந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் டாப் 3 இடத்தை கூட பிடிக்கவில்லை. இதன்காரணமாக பூஜாவின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.