வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

இரட்டை சகோதரிகளான அருணா மற்றும் அகிலாவை அவரது பாட்டி தான் கோயில்களில் நடக்கும் இசை வகுப்புகளில் சேர்ந்துள்ளார். அதன்பின் படிப்படியாக இசையை கற்றுக்கொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருணா, தனது திறமையால் இறுதிபோட்டிக்கும் தேர்வானார். பானை செய்யும் குடும்பத்தை சேர்ந்த அவர் ஒருமுறை எபிசோடில் பேசிய போது கோயில்களில் பாடச் செல்லும் போது தாங்கள் சந்திக்கும் சாதிய ரீதியான அழுத்தங்கள் குறித்து சோகத்துடன் கூறியிருந்தார். இன்று அதேமேடையில் டைட்டில் பட்டம் வென்றதுடன், சூப்பர் சிங்கர் வரலாற்றிலேயே டைட்டில் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் அருணா படைத்துள்ளார். இசைக்கு சாதி, மதம் கிடையாது என்பதை சாதி வெறியர்கள் தலையில் ஆணி அடித்தது போல் சாதித்து காட்டிய அருணாவுக்கு மக்கள் பெரும்பாலானோர் தங்கள் அன்புகளை பகிர்ந்து வருகின்றனர். இசை மட்டுமல்லாது பாடல் வரிகளும் எழுதும் திறன் கொண்ட அவரை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




