அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் |
1997ம் ஆண்டு வெளிவந்த படம் 'அருணாச்சலம்'. ரஜினி, சவுந்தர்யா, ரம்பா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுந்தர்.சி இயக்கி இருந்தார். இந்த படத்தின் ஒன் லைனே 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் வேண்டும் என்றால் 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்து காட்ட வேண்டும் என்ற நிபந்தனை நாயகனுக்கு விதிக்கப்படுவதுதான்.
இதே கதைதான் 1954ம் ஆண்டு வெளிவந்த 'பணம் படுத்தும் பாடு' என்ற படத்தின் கதையும். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படத்தில் என்.டி.ராமராவ், சவுகார் ஜானகி, யமுனா நடித்திருந்தார். என்.டி.ராமராவ் பணக்கார பெண்ணான யமுனாவை காதலிப்பார். அந்த காதலை ஏற்றுக் கொள்ள யமுனாவின் தந்தை என்.டி.ராமராவுக்கு பணம் படுத்தும் பாட்டை தெரிந்த கொள்ள ஒரு பரீட்சை வைப்பார். ஒரு லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் செலவு செய்து காட்ட வேண்டும். நன்கொடையோ, அல்லது வீணான செலவோ செய்யக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
இந்த இரண்டு கதையுமே ஜார்ஜ் பார் மெக்கட்சியோனின் ப்ரூஸ்டர்ஸ் மில்லியன்ஸ் (1902) நாவலை அடிப்படையாகக் கொண்டது .