மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சின்னத்திரை நடிகர்கள் தினேஷ் மற்றும் ரச்சிதா மஹாலெட்சுமி ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது இருவருக்குமிடையே பிரச்னை முற்றிப்போய் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது. தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக ரச்சிதா அண்மையில் போலீஸ் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து இருவருமிடம் விசாரனை நடத்திய காவல்துறையினர் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடுமாறு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ரச்சிதாவின் புகார் குறித்து விளக்கமளித்துள்ள தினேஷ், தனது செல்போனில் ரச்சிதாவுடன் பேசிய சேட் பாக்ஸை காட்டி தான் ஆபாசமாகவோ, திட்டியோ ரச்சிதாவிற்கு மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் ரச்சிதாவின் நடத்தையை வைத்து பார்க்கும் போது இனி சேர்ந்து வாழ வாய்ப்பை இல்லை என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.