இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகர்கள் தினேஷ் மற்றும் ரச்சிதா மஹாலெட்சுமி ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது இருவருக்குமிடையே பிரச்னை முற்றிப்போய் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது. தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக ரச்சிதா அண்மையில் போலீஸ் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து இருவருமிடம் விசாரனை நடத்திய காவல்துறையினர் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடுமாறு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ரச்சிதாவின் புகார் குறித்து விளக்கமளித்துள்ள தினேஷ், தனது செல்போனில் ரச்சிதாவுடன் பேசிய சேட் பாக்ஸை காட்டி தான் ஆபாசமாகவோ, திட்டியோ ரச்சிதாவிற்கு மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் ரச்சிதாவின் நடத்தையை வைத்து பார்க்கும் போது இனி சேர்ந்து வாழ வாய்ப்பை இல்லை என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.