ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை வனிதா விஜயகுமாரின் இரண்டாவது மகள் பெயர் ஜெயனிதா ராஜன். வனிதாவின் விவகாரத்துக்கு பின் தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வனிதாவும் ஜெயனிதாவும் சந்தித்து தங்கள் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது 14 வயதே ஆன ஜெயனிதா ராஜன் 'டே அண்ட் நைட்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வனிதா 'என்னோட அரிசிமூட்டை எழுத்தாளர் ஆகிட்டா' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ஜெயனிதாவின் திறமையை பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.