ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் தாரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கி வந்தார். அவரது மிரட்டலான நடிப்பு நேயர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வந்தது. ஆனால், சோனா திடீரென மாரி சீரியலை விட்டு விலகிவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாததால் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில், தற்போது சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை தான் காரணம் என தெரியவந்துள்ளது.
மாரி தொடரில் சோனாவுக்கு மருமகளாக நடிக்கும் ஷப்னம் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் எல்லோரையும் ஜாலியாக கிண்டலடித்து பேசுவார். அவர் ஒரு முறை சூட்டிங்கின் போது சோனாவை பற்றி கிண்டலாக பேச இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால் கோபமான சோனா ஒருகட்டத்தில், 'மாரி சீரியல்ல அவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும்' என்ற ரேஞ்சில் சீரியல் குழுவினரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். சோனாவை சமாதானப்படுத்த முடியாத சீரியல் குழுவினர் தாரா கதாபாத்திரத்திற்கு வேறு நடிகையை தேட ஆரம்பித்துவிட்டதாக சின்னத்திரை வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.




