மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை தம்பதிகளான சம்யுக்தா, விஷ்ணுகாந்த் திருமணமாகி சில நாட்களிலேயே பிரிந்துவிட்ட நிலையில், ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் முதலில் லைவ் வந்த சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன் உறவினருக்கு போன் செய்து தன்னை பற்றிய வீடியோ, ஆடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இதனையடுத்து மாலையில் லைவ் வந்த விஷ்ணுகாந்த் 'நான் யாரையும் மிரட்டவில்லை. சம்யுக்தா மற்றும் அவரது குடும்பத்தாரை என் குடும்பத்தாருடன் சந்தித்து பேசி சுமூகமாக முடிவெடுக்கவே அழைத்தேன்' என்று கூறியிருக்கிறார். அதற்கு சாட்சியாக சம்யுக்தாவின் சித்திக்கு போன் பேசிய ரெக்கார்டை லைவ்வில் போட்டு காண்பித்தார். போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விவகாரம் மற்றும் சம்மன் குறித்த சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கும் அந்த வீடியோவில் அவர் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து இதுநாள் வரை விஷ்ணுகாந்தை கண்மூடித்தனமாக விமர்சித்த பலரும் தற்போது சம்யுக்தா தரப்பிலும் ஏதோ பிரச்னை இருக்கிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசி விரைவில் தீர்வு காண வேண்டும் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.