இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தொலைக்காட்சி வந்த புதிதில் சீரியல்களுக்கு தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. குடும்ப பாங்கான கதைகள், நகைச்சுவை டிராமாக்கள், பக்தி நாடகங்கள் என தரமான சீரியல்களை எடுத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், இன்று டிஆர்பி வேட்டைக்காக கண்டதையும் கதையாக எடுத்து வருகின்றனர். வேற்று மொழி சேனல்களின் சீரியலை காப்பி பேஸ்ட் செய்து வருவதுடன் அதில் வருவது போலவே க்ளாமர் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளையும் தமிழ் சீரியல் உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் முதலிரவு காட்சி, முத்தக்காட்சிகளைஒளிபரப்பியுள்ளனர். இதற்கு பலதரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை குடும்பமாக பார்க்கும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இதையெல்லாம் காட்ட வேண்டுமா? இனி சீரியலுக்கும் சென்சார் தேவையா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.