என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தொலைக்காட்சி வந்த புதிதில் சீரியல்களுக்கு தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. குடும்ப பாங்கான கதைகள், நகைச்சுவை டிராமாக்கள், பக்தி நாடகங்கள் என தரமான சீரியல்களை எடுத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், இன்று டிஆர்பி வேட்டைக்காக கண்டதையும் கதையாக எடுத்து வருகின்றனர். வேற்று மொழி சேனல்களின் சீரியலை காப்பி பேஸ்ட் செய்து வருவதுடன் அதில் வருவது போலவே க்ளாமர் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளையும் தமிழ் சீரியல் உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் முதலிரவு காட்சி, முத்தக்காட்சிகளைஒளிபரப்பியுள்ளனர். இதற்கு பலதரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை குடும்பமாக பார்க்கும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இதையெல்லாம் காட்ட வேண்டுமா? இனி சீரியலுக்கும் சென்சார் தேவையா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.