சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் | சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் | இந்திய பாக்ஸ் ஆபீஸ் 2025 : எத்தனை கோடி வசூல் தெரியுமா ? | அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? |

தொலைக்காட்சி வந்த புதிதில் சீரியல்களுக்கு தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. குடும்ப பாங்கான கதைகள், நகைச்சுவை டிராமாக்கள், பக்தி நாடகங்கள் என தரமான சீரியல்களை எடுத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், இன்று டிஆர்பி வேட்டைக்காக கண்டதையும் கதையாக எடுத்து வருகின்றனர். வேற்று மொழி சேனல்களின் சீரியலை காப்பி பேஸ்ட் செய்து வருவதுடன் அதில் வருவது போலவே க்ளாமர் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளையும் தமிழ் சீரியல் உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் முதலிரவு காட்சி, முத்தக்காட்சிகளைஒளிபரப்பியுள்ளனர். இதற்கு பலதரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை குடும்பமாக பார்க்கும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இதையெல்லாம் காட்ட வேண்டுமா? இனி சீரியலுக்கும் சென்சார் தேவையா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.




