அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் கசப்புடன் முடிவுக்கு வர, தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அர்னவுக்கு புதிய சீரியல் வாய்ப்பு கிடைக்க, அதில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதனால் திவ்யாவுக்கும் அர்னவுக்கும் பிரச்னை எழுந்தது. இதில், கர்ப்பிணி என்று கூட பாராமல் திவ்யாவை அர்னவ் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் போலீஸ் புகார் வரை சென்று கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் திவ்யா ஸ்ரீதர், மகளுக்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு 'குழந்தைகள் கடவுளிடமிருந்து பிரிந்து வரும் நட்சத்திர துகள்கள், அப்படியொரு நட்சத்திரத்தை பெற்றெடுக்கும் பிறப்பின் வேதனையை அறிந்த அதிர்ஷ்டசாலி நான்' என மகள் பிறந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.