வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் கசப்புடன் முடிவுக்கு வர, தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அர்னவுக்கு புதிய சீரியல் வாய்ப்பு கிடைக்க, அதில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதனால் திவ்யாவுக்கும் அர்னவுக்கும் பிரச்னை எழுந்தது. இதில், கர்ப்பிணி என்று கூட பாராமல் திவ்யாவை அர்னவ் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் போலீஸ் புகார் வரை சென்று கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் திவ்யா ஸ்ரீதர், மகளுக்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு 'குழந்தைகள் கடவுளிடமிருந்து பிரிந்து வரும் நட்சத்திர துகள்கள், அப்படியொரு நட்சத்திரத்தை பெற்றெடுக்கும் பிறப்பின் வேதனையை அறிந்த அதிர்ஷ்டசாலி நான்' என மகள் பிறந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.




