மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் கசப்புடன் முடிவுக்கு வர, தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அர்னவுக்கு புதிய சீரியல் வாய்ப்பு கிடைக்க, அதில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதனால் திவ்யாவுக்கும் அர்னவுக்கும் பிரச்னை எழுந்தது. இதில், கர்ப்பிணி என்று கூட பாராமல் திவ்யாவை அர்னவ் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் போலீஸ் புகார் வரை சென்று கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் திவ்யா ஸ்ரீதர், மகளுக்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு 'குழந்தைகள் கடவுளிடமிருந்து பிரிந்து வரும் நட்சத்திர துகள்கள், அப்படியொரு நட்சத்திரத்தை பெற்றெடுக்கும் பிறப்பின் வேதனையை அறிந்த அதிர்ஷ்டசாலி நான்' என மகள் பிறந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.