''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தமிழில் சில சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது செவ்வந்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அந்த திருமணத்தின் மூலம் ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இதனையடுத்து அர்னவை அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு தற்பொது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியே வசித்து வந்த திவ்யாவுக்கு சீரியல் நடிகர்கள் தான் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கூட செய்திருந்தனர். இந்நிலையில், திவ்யா தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் உருக்கமான பதிவிட்டுள்ள திவ்யா, குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்த படி போட்டோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாய் சேய் நலமாக இருக்க வேண்டுமென பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.