அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கன்னட சின்னத்திரை நடிகையான மதுமிதா தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பேவரைட்டான நடிகையாக மாறியுள்ளார். முன்னதாக கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏற்கனவே சீரியல்கள் நடித்திருந்தாலும் மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் சீரியலின் ஜனனி கதாபாத்திரம் தனியொரு இடத்தை பெற்று தந்துள்ளது. நன்றாக தமிழ் பேச கற்றுக்கொண்டுள்ள மதுமிதா அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், 'முன்னதாக நடித்த சீரியல்களில் ஓவர் ஆக்ட் செய்வேன். அது அந்த சீரியல்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் எதிர்நீச்சல் தொடர் நிஜவாழ்க்கையுடன் கனக்ட் ஆகிறது. மற்ற சீரியல்களை போல் அல்லாமல் எதிர்நீச்சல் தொடரில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஈஸ்வரி, நந்தினி கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். குறிப்பாக மாரிமுத்து அனைவர் வீட்டிலும் இருக்கிறார். மாரிமுத்துவை அடிக்க வேண்டும் என என்னிடமே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் ரீச்சாகியுள்ளது. இந்த தொடரில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. 10 வருடம் இந்த சீரியல் தொடர்ந்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன். இங்கேயே செட்டிலாகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.