பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹிந்தியில் நாகினி போல் தமிழ் சின்னத்திரையில் நாகத்தை வைத்து எடுக்கப்பட்ட பேண்டஸி கதை நந்தினி. அதிக பொருட்செலவில் உருவான இந்த தொடரில் விஜயகுமார், நித்யா ராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த நித்யா ராமுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் கிடைத்தனர்.
நந்தினி தொடர் 2018-ல் முடிவடைந்த பிறகு நித்யா ராம் தமிழில் எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. இதனால் வாடிப்போன ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நித்யா ராம் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் அண்ணா என்கிற தொடரில் நித்யா ராம் ஹீரோயினாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சரவணன் மீனாட்சி' செந்தில் நடிக்கிறார். மேலும், குக் வித் கோமாளி, பாக்கியலெட்சுமி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரித்திகா தமிழ்செல்வியும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நித்யா ராம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரியாவதை ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.